
இணைய சேவை முடங்கி 14 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள ஈரான்!
ஈரானில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், அந்நாட்டின் இணையச் சேவைகள் முற்றாகச் சீர்குலைந்து இன்றுடன் 14 நாட்கள் கடந்துள்ளதாக இணைய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான ‘NetBlocks’ தெரிவித்துள்ளது.
கடந்த 312 மணித்தியாலங்களாக ஈரானின் இணையத் தொடர்பு மிக மோசமான நிலையில் காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது அந்நாட்டின் இணைய இணைப்பானது அதன் சாதாரண மட்டத்தில் வெறும் 1 வீதம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.
தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு காரணங்களினால் இணையம் முடக்கப்பட்டுள்ளமை, அந்நாட்டு மக்களின் தகவல் தொடர்புகளையும் அத்தியாவசிய சேவைகளையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
