IPL இறுதிப் போட்டி : களத்தடுப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்!

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணியின் தலைவர் தோனி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளார்.

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும்,  நேற்றிரவு அகமதாபாத்தில் பெய்த கடும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டிருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்