இணுவையூர் கந்தசுவாமி ஆலயத்தில் பால்குடபவனி

-யாழ் நிருபர்-

இந்துமக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான தைப்பூச உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றன.

இதனை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவையூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று பால்குடபவனி யாழ்ப்பாணம் – மருதனார் மட சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் இணுவையூர் கந்தசாமி தேவஸ்தானம் வரை சென்றடைந்தது நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து இணுவையூர் கந்தசாமி ஆலயத்தில் இணுவையூர் கந்தசாமிக்கு பால் அபிஷேசகம் உற்சவம் இடம்பெற்றது.

இதில் நூறுக்கு மேற்பட்ட பெண்களால், பக்தர்கள், பால் குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அத்துடன் இந்த ஆலயத்தில் உலக பெரும் மஞ்சப்பெருவிழா இன்று மாலை இடம்பெறும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.