
சர்வதேச யோகா தினம்
-மூதூர் நிருபர்-
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகள் திருகோணமலை பிரதான கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்தேறியது.
அகரம் மக்கள் கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர லயன்ஸ் கழகத்தின் அனுசரனையுடன் திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் மற்றும் மாவட்ட திரிசாரணர்கள் பங்கேற்றலுடன் யோகா பயிற்சிகள் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலைக்கூட மாணவர்கள், சாரணர்கள் உட்பட 150ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
