இதுவரை 461 இந்திய மீனவர்கள் விடுதலை

2020 முதல் இந்த ஆண்டு வரை 461 இந்திய மீனவர்களை இலங்கை விடுதலை செய்துள்ளதாக,  இந்திய வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், 24 இந்திய மீனவர்கள் இன்னும் இலங்கையின் சிறையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.