யாத்திரை செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்

யாத்திரை செல்வோருக்கான முக்கிய அறிவித்தல்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாத்திரையில் ஈடுபட்டிருந்த நான்கு யாத்திரிகர்கள் உணவு விஷமானதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 10 நோயாளர்கள் உணவு விஷம் மற்றும் பக்டீரியா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சிவனொளிபாதமலை யாத்திரை மற்றும் பிற யாத்திரைகளில் ஈடுபடும் அனைத்து பக்தர்களும் ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், பொதுமக்கள் முடிந்தவரை கொதித்தாறிய நீரை தங்கள் வீடுகளில் இருந்து எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்