ICC தலைவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுப்பியுள்ள கடிதம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் (ICC) தலைவருக்கு,  விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில்  அரசியல் தலையீடு உள்ளதா என்பது குறித்து ஆராய்வதற்காக, சர்வதேச கிரிக்கட் பேரவை, 3 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளதாக  சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இது குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தே, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் க்ரெக் பாக்லேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.