பொலிஸாரின் விரலை கடித்து தப்பிய ஹந்தயா

ஈஸி கேஸ் முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஹந்தயா என அழைக்கப்படும் சந்தேகநபர், அவரை சோதனையிட சென்ற பொலிஸ் பரிசோதகரின் விரலை கடித்து அருகில் உள்ள கால்வாயில் குதித்து தப்பிச்சென்றதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய ருவன்வெல்ல அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் அருகில் வைத்து குறித்த நபரை பிடித்து சோதனை செய்ய முற்பட்ட போதே, இவ்வாறு பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சந்தேக நபர், பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்