
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய புலமைப்பரிசில் பரீட்சை 2,894 பரீட்சை நிலையங்களில், 334,698 பரீட்சார்த்திகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பரீட்சையில், பரீட்சை நடத்தும் முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்கள் தமது புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளின் இரண்டாவது பகுதிக்கு முதலிலும், முதலாவது பகுதிக்கு இரண்டாவதாகவும் விடையளிக்கவுள்ளனர்.