மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்
மஹரகம பகுதியில் அமைந்துள்ள சிறப்பு அங்காடி தொகுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு சேவைத் திணைக்களம் தீயை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
தீயணைப்புப் படையினர் தற்போது தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
