
மட்டக்களப்பு புகையிரத நிலைய விடுதி பகுதியில் பாரிய தீ!
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதிபகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை தீடிரென தீபற்றியதையடுத்து அந்த பகுதியில் தீ பரவியதையடுத்து அங்குள்ள பனைமரங்கள் மற்றும் மரங்கள் தீயில் எரிந்ததையடுத்து மட்டு நாகரசபை தீயணைப்பு படடையினர் இராணுவத்தினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்
குறித்த பகுதியில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் அந்த பகுதியிலுள்ள புல் தரைகளில் தீபற்றிஅ ங்கு பரவத் தொடங்கிய தீ பனை மரங்கள் மற்றும் மரங்களில் பற்றியதுடன் புகையிரத எஞ்சின் திரும்பும் பகுதி மற்றும் புகையிரத பெற்றோல் தாங்கி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பதியை நோக்கி தீ பரவத் தொடங்கியது.
இதனையடுத்து மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் மற்றும் உறுப்பினர்கள்
தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் சுமார் 2 மணித்தியாலம் போராடி தீயை கட்டுப்பட்டிற்குள் கொண்டு வந்தனர்.