அவசரகால நிலை நீடிப்பு : நாடாளுமன்றத்தில் 110 மேலதிக வாக்குகளால் அங்கீகாரம்!

நாட்டில் அமுலிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்றத்தில் மேலதிக வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆதரவாக 137 வாக்குகளும் எதிராக 27 வாக்குகளும் வழங்கப்பட்டன.

இதற்கமைய, அவசரகால நிலை நீடிப்பு தொடர்பான தீர்மானம் 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.