காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி – வீடியோ இணைப்பு-

-மன்னம்பிட்டி நிருபர்-

பொலனறுவை மன்னம்பிட்டி பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னம்பிட்டி பகுதியில் உள்ள மாட்டுப் பண்ணையில் மாடுகளை பராமரித்துக் கொண்டிருந்த போதே இவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மன்னம்பிட்டி வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கண்ணன் மாமா என்று அழைக்கப்படும் திசநாதன் (வயது- 56) என்பரே உயிரிழந்துள்ளார்.

பெலனறுவை மன்னம்பிட்டி பகுதியில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக உயிரிழப்புக்கள் உட்பட சொத்தழிவுகளும் ஏற்பட்டு வருவதாக எமது மன்னம்பிட்டி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=1dFWopTZ-DQ

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்