பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இன்று திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால், பேக்கரி தொழில்துறையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஆராய்வதற்காக இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களினதும் திருத்தப்பட்ட புதிய விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.