
உயிரை மாய்த்துக் கொண்ட 24 வயது இளைஞன்
-யாழ் நிருபர்–
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று திங்கட்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார்.
அவர் காலையில் எழுந்து வராததால் வீட்டில் உள்ளவர்கள் அறையின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.