
விடுதியிலிருந்து சடலம் மீட்பு
பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் இன்று செவ்வாய் கிழமை காலை 9 மணியளவில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் விடுதியில் தனியாக இருந்ததாகவும், அவர் அந்த இடத்தை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
