உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதாகவும், இது தொடர்பில் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.