மட்டக்களப்பு கொத்துக்குளம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வரலட்சுமி பூஜை

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம்  ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை சிவ ஸ்ரீ  நிஜோத் குருக்கள் தலைமையில் வெகுசிறப்பாக சிறப்பாக இடம்பெற்றது.

மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப் பெயர் கொண்ட உலகமெல்லாம் இரட்சத்துவரும் அன்னை மாரியம்மன் அகல் விளக்கு எரியவைத்த காலத்துக்கு முந்திய காலமாக மட்டக்களப்பில் அருள்பாலித்துவருகின்ற அம்பாளின் வரலட்சுமி பூஜை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடியார்கள் மஞ்சள் நிற கலாச்சார ஆடை அணிந்து  திருவிளக்குப் பூஜை ஈடுபட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்