
மட்டு .கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் மகராஜ் ஆசி வழங்க, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.ஹரிகரராஜ் மற்றும் மண்முனை- வடக்கு பிரதேச செயலாளர் பி.வாசுதேவன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், மண்முனை- வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.பி.ரவிச்சந்திரா, மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.லவகுமார், கல்லூரி பழைய மாணவிகள் சங்க செயலாளர் வைத்தியர் திருமதி பிரமிளா சசிக்குமார் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் பி.வேந்திரராஜா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கல்வி மற்றும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் சாதனை படைத்த 222 மாணவிகள் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், மாணவிகளின் வரவேற்பு நடனம், பாடல்கள் மற்றும் நடனங்கள் என்பன இடம்பெற்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்









