ATM கார்ட்டை திருட முயன்ற இளைஞர் கைது
தலவாக்கலையில் ATM கார்ட் கொள்ளையிட முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலவாக்கலை நகரில், வங்கி ATM ஒன்றில் பணம் எடுக்க வந்த பெண்ணின் அட்டையைத் திருட முயன்ற இளைஞர் ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ செலவுக்காக பணம் எடுக்க வந்த பெண், அருகில் இருந்த இளைஞரிடம் தனது இரகசிய எண்ணை சொல்லி உதவி கேட்டுள்ளார்.
அவர் அந்த விவரத்தை தெரிந்தவுடன், யுவுஆ அட்டையுடன் தப்பியோட முயன்றுள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த இளைஞர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.