23 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஐவர் கைது

23 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மீன்பிடிக் கப்பலுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் கடற்படையினர் சந்தேக நபர்களையும் ஹெரோயினையும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.