துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது

 

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, நேற்று புதன்கிழமை மாலை சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது குறித்த துப்பாக்கி மற்றும் வாள் கைப்பற்றப்பட்டது.

கைதான சந்தேகநபர் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாள் மற்றும் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது