திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது

-பதுளை நிருபர்-

ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியான மின் உபகரணங்களை திருடிய நான்கு சந்தேக நபர்கள் பசறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

54. 49. 45. 47 வயதுகளையுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மௌசாகலை பகுதியில் வீடொன்றின் பின்புறமாக நுழைந்து, வீட்டில் உள்ள LED தொலைக்காட்சி, மின்அரைப்பான், முற்கால சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை திருடியுள்ளனர்.

சம்பவத்தில்  மௌசாகலை பகுதியைச் சேர்ந்த நால்வர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.