Anunine Holdings நிறுவனத்தினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், Anunine Holdings நிறுவனத்தினால் 25 மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையை Anunine Holdings நிறுவனத்தின் தலைவர் அனுரத் அபேரத்ன இன்று செவ்வாய்க்கிழமை (09) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

அதன் முகாமைத்துவப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.