
ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளையில் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுலுபிட்டி பகுதியில் 5220 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய கிரீன்லாந்து டிரைவ் பதுலுபிட்டிய பதுளை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பதுளை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்