கூரை மேல் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவு உட்பட்ட பன்குளம் பகுதியில் கூரை மேல் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த அமரசிங்கம் தேவதாஸ் (68வயது) என தெரியவருகிறது.
மழை பெய்தமையினால் கூரை மேல் ஏறி கூரையை திருத்திக் கொண்டிருந்த போது தவறி விழுந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், உடல் கூற்று அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மரணம் தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்