
சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 2 மாத குழந்தை உயிரிழப்பு
ஓமந்தை – புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வீடொன்றின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 2 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
சம்பவத்தின் போது குழந்தையின் தாயும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்