யாழ் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் 140 மியன்மார் பிரஜைகள்

யாழ்ப்பாணத்தை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் சேதமடைந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 140 வெளிநாட்டு பிரஜைகளும் கரைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

குறித்த 140 பேரும் மியன்மார் பிரஜைகள் என கடற்படை அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்ட போது அவர்கள் பயணித்த படகு சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து இலங்கை மீனவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய அவர்கள் மீட்கப்பட்டு மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான 4 படகுகளும் கப்பல் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.