
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : மின்தடை இல்லை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதால், இன்று சனிக்கிழமை மின்வெட்டு இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாளை ஆரம்பமாகவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,894 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இப்பரீட்சைக்கு 334,698 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.