
திலினி பிரியமாலிக்கு பிணை
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு கொழும்பு கோட்டை நீதவான் இன்று வெள்ளிக்கிழமை பிணை வழங்கியுள்ளார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்பதாவது வழக்கை விசாரித்த கோட்டை நீதவான் திலின கமகே அவருக்கு பிணை வழங்கியுள்ளார்.
திகோ குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திலினி பிரியமாலி, பல்வேறு நிதி மோசடிகள் தொடர்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 8 வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அந்த வழக்குகளுக்காக அவருக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.
