மட்டக்களப்பின் பிரபல பாடசாலையில் சோதனை நடவடிக்கை

 

மட்டக்களப்பில் நேற்று வியாழக்கிழமை முதல் போதைப் பொருளை தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

அதன்படி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மோப்ப நாய்களின் உதவியுடன் மாணவர்களின் பாடசாலை பைகளை சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.