நாட்டின் சில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இன்று வியாழக்கிழமை காலை 09.00 மணி நிலவரப்படி இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) எச்சரித்துள்ளது.

காற்றுத் தரக் குறியீட்டில் (AQI) முறையே 114 மற்றும் 117 என பதிவான பத்தரமுல்ல, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய இடங்களுக்கு “சிவப்பு” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் (81), முல்லைத்தீவு (80), கேகாலை (87) மற்றும் தம்புள்ளை (84) ஆகிய இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.  NBROவால் “ஊதா” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இது காற்றின் தர சுட்டெண்ணில் 44 மற்றும் 43 ஐ பதிவு செய்த பின்னர், உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு ஆரோக்கியமற்ற அளவுகள் குறித்து எச்சரிக்கிறது.

இந்தியாவில் இருந்து வரும் மாசுபட்ட காற்று, காற்றின் மூலம் இலங்கையின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளதாகவும், அதனால், இலங்கையின் வடக்குப் பகுதி மற்றும் சில பகுதிகள் தற்போது காற்றின் தரத்தில் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொள்வதாகவும் NBRO தெரிவிக்கின்றது.

நாட்டின் சில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை