மயிரிழையில் பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி

-பதுளை நிருபர்-

சாரதியின் சாமர்த்தியத்தால் சுமார் 50 பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது.

பதுளை ஸ்பிரிங்வெளியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பதுளை இருந்து ஸ்பிரீங்வெளி செல்லும் வீதியில் தும்பிலியாவ பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாக இருந்த நிலையில், சாரதியின் சாதுர்யமான முயற்சியினால்  பாரிய விபத்து ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தில் கிட்டத்தட்ட 50பேர் வரை பயணித்ததாகவும், இதில் அதிகளவானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் இவர்கள் அனைவரும் கருத்தரங்கு ஒன்றிற்காக குறித்த பேருந்தில் வருகை தந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் பயணித்த எவருக்கும் எதுவித சேதங்களும் ஏற்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.