குளத்தில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன் (வயது -21) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானின் அனுமதியுடன் சடலம் மீட்கப்பட்டு, உடல் கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக , கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.