ப்ளே பாய் நண்பனின் ஆணுறுப்பை வெட்டிய இளைஞர்

இந்தியாவின் மஹாராஷ்டிரா பிவந்தி பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம் அன்சாரி, இவரும் ஷமீம் அன்சாரி என்பவர்களும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஷமீம் காதலி மீது அஸ்லாமிற்கு காதல் ஏற்பட்டது.

ஹமீமிற்கு 5 காதலிகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், யாருடனும் நேர்மையாக இருக்கவில்லை. இதனை அறிந்த அஸ்லாம், தான் காதலிக்கும் ஷமீமின் காதலிக்கு உண்மையாக இருக்குமாறு கேட்டுள்ளார். இல்லையெனில் அந்த பெண்ணை விட்டு விலகுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை ஹமீம் பொருட்படுத்தால் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அஸ்லாம், ஷமீமின் பிறப்புறுப்பை அறுத்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, இருவரும் ஷமீமின் ஹோட்டலில் பார்ட்டி செய்துள்ளனர். அப்போது மீண்டும் காதலி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அஸ்லாம் சமீமை கண் மற்றும் உடற்பகுதிகளில் 9 முறை கத்தியால் குத்தினார். இதனையடுத்து பிறப்புறுப்பை அறுத்து அவர் வாயில் திணித்துவிட்டு தப்பி ஓடினார்.

மறுநாள் காலை ஹோட்டல் ஊழியர் வந்து ரத்தக்கறையை பார்த்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், அஸ்லாம் தான் உடனிருந்தார் என்பதை கண்டறிந்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.