
300 கிலோ ஹெரோயினுடன் 10 பேர் கைது
ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு சொந்தமான 2 மீன்பிடி படகுகள் மற்றும் ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
படகுகள் காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
