
தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையாக இருந்த வயோதிபப் பெண்ணொருவரை சுட்டியலால் தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று கிண்ணியா பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
கிண்ணியா- பைசல் நகர் பகுதியில் வசித்து வந்த அப்துல் லத்தீப் பாத்தும்மா (79வயது) என்ற பெண் தனிமையாக இருந்தபோது இருவர் தனது வீட்டுக்கு வந்து சுத்தியலால் தலையில் தாக்கி காயப்படுத்தியதாகவும் , இதேவேளை கழுத்தில் இருந்த தோடு, தங்க ஆபரணங்களை கழற்றி சென்றதாகவும் தெரிய வருகிறது.
இதனையடுத்து, குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேசத்தில் தற்போது போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றமையால் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து கிண்ணியா பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிசிடிவி காணொளிகளையும் பெற்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
