
நாட்டில் மேலும் 4 கொவிட் மரணங்கள்
நேற்று திங்கட்கிழமை கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நால்வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உயிரிழந்த நால்வரில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளனர்.
இந்த நான்கு கொவிட் இறப்புகளுடன், இலங்கையில் கொவிட் 19 வைரஸின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 669,140 ஆக உயர்ந்துள்ளது.