7 நகர சபைகள் மாநகரசபையாக தரமுயர்வு

களுத்துறை, வவுனியா, புத்தளம், திருகோணமலை, மன்னார், அம்பாறை, கேகாலை ஆகிய நகர சபைகள் மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீர் மற்றும் கழிவுநீர்க் கட்டணங்களை மீளாய்வு செய்வதற்கு இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.