சீனாவின் சினோபெக் இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைகிறதா?

சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிசக்தி கூட்டுத்தாபனமான சினோபெக், இலங்கை எரிபொருள் சந்தையில் சில்லறை வர்த்தக வாய்ப்புகளை கவனித்து வருகிறது.

பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட இந்நிறுவனம், இலங்கையின் பெற்றோலிய சந்தையில் பொருட்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும் மற்றும் விநியோகிக்கவும் நுழைய ஆர்வமாக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

சினோபெக் ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை நிர்வகிக்கின்றது.

இந்நிலையில், சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்வதற்கு இலங்கை சந்தையில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியின் காரணமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைச் சேர்ந்த அதிகமான நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்து சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை இலங்கையில் தொடங்குவதற்கு எரிசக்தி அமைச்சரின் முன்மொழிவிற்கு ஜூன் மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அரசுக்கு சொந்தமான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் 90 வீதத்தை வழங்குகின்றது, எஞ்சிய 10 வீதமானது இந்திய நிறுவனமான ஐ.ஓ.சி மூலம் வழங்கப்படுகின்றது.