
தேசிய எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பம்
தேசிய எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் அந்த சேவை முடக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய பதிவுகளுக்காக இந்த அமைப்பு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
