பிரதமரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை அமைச்சர்களுடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

சர்வகட்சி ஆட்சி அமைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த அரசாங்கத்திடம் தமது பொறுப்புக்களை ஒப்படைக்கத் தயார், என கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைச்சர்கள் அனைவரும் கருத்து வெளியிட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.