பதவி விலக தயார் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
பிரதமர் பதவியிலிருந்து விலகி சர்வகட்சி அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை தாம் ஏற்றுக்கொள்வதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
