
தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 26 வயது குடும்பஸ்தர்
-கிளிநொச்சி நிருபர்-
தர்மபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பகுதியில் பகுதியில் வசிக்கும் இளவரசன் கலையரசன் (26 வயது) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
