தனியாக இருந்த வயோதிப பெண்ணிடம் நகை மற்றும் பணம்‌ கொள்ளை

-கிளிநொச்சி நிருபர்-

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முல்லையடி பகுதியில் தனியாக வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீடொன்றினுள்‌ நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அந்த பெண்ணிடம் அச்சுறுத்தி நகை மற்றும் பணம்‌ கொள்ளையிட்டு‌ சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு‌ செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.