தமது நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு
ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணய மாற்று விகிதங்களை மாற்றியமைக்கும் தீர்மானத்தை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கான முன்னேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்தில், ரூபாவின் நெகிழ்வுத்தன்மை நெகிழ்வான மாற்று விகிதத்தை கடுமையாக வீழ்ச்சியடையச் செய்ததாக, மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
