
இலங்கைக்கு ஆதரவளிப்பதை IMF உறுதிப்படுத்தியுள்ளது
தற்போதுள்ள நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதிய ஆதரவு வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு உறுதியான நடவடிக்கைகளை வகுக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IMF ஊழியர்கள் இலங்கைக்கான மெய்நிகர் பணியை முடித்துக் கொண்டு, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமையை மிக நெருக்கமாக தொடர்ந்து கண்காணித்து, உறுதியான நடவடிக்கைகளை உருவாக்குவார்கள்.
சர்வதேச நாணய நிதிய குழுவொன்று இலங்கை அதிகாரிகளுடன் மே 9-24 வரை கடன் வழங்கும் ஏற்பாட்டின் மூலம் ஒரு பொருளாதார வேலைத்திட்டத்தில் ஒரு மெய்நிகர் பணியை நடத்தியது, என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

