நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலையில் தங்கியிருப்பார்

நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் தங்கியிருப்பார்.

தற்போதைய நிலைமை வழமைக்கு திரும்பியவுடன் அவர் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவார், என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் அலரி மாளிகையை சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையால், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.