துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி மீட்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில், துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

அனலைதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றினை, காணியின் உரிமையாளர் சுத்தம் செய்துள்ளார்.

இதன்போது, மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த குறித்த கைக்குண்டும், துப்பாக்கியும் அவதானிக்கப்பட்டதையடுத்து, இது குறித்து ஊர்காவல்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.