
உயர்தரப் பரீட்சையில் சாதித்த யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
யாழ்.இணுவில் தெற்கு இணுவிலைப் பகுதியைச் சேர்ந்த லவன் அக்சயன் என்பவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கல்வி கற்று, கணிப் பிரிவில் 2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினார்.
அதனடிப்படையில் அண்மையில் வெளியான 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், 3 A சித்திகள் பெற்று, யாழ் மாவட்ட ரீதியில் 24 ஆவது இடம் பிடித்துச் சாதித்திருந்தார்.
இவ்வாறு கல்வியில் சாதித்த குறித்த மாணவனின் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
